தற்கொலை செய்யும் நோக்கில் தீயில் எரிந்த யாழ் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீசன் இன்று காலை உயிரிழந்தார்.
யாழ் தென்மராட்சி பகுதியில் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தனது சேவையை நேர்மையாக திறமையுடன் துடிதுடிப்புடன் செய்து வந்தவர்.
தமிழ்ப்பற்றுடன் மிகச்சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதியில் செய்து வந்தார்.
கடவுள் பக்தியுடன் அறம்சார்ந்து இயங்கினார். வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பல பாடசாலை மாணவர்களுக்கு இயலுமான உதவிகளை செய்தவர்.
இவரது இழப்பினால் பரிதவிக்கும் அவரது பிள்ளைக்கும் தமிழினியின் பெற்றோருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.











