யாழ்-கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மறைந்த முருகேசு சிவசிதம்பரம் அவர்களின் 101 வது அகவை தின நினைவு நிகழ்வு நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரின் சிலை வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பி னர்கள், அரசியல் பிரமுகர்கள் கரவெட்டி அபிவிருத்தி ஒன்றிய நிர்வாகிகள் பொது மக்கள் ஆகியோர் மலர்மாலை சூடி மலர் தூவி நினைவேந்தல் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.









