குறித்த நிகழ்வானது பளை மத்திய கல்லூரியின் மண்டபத்தில் 9.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக பேராசிரியர் .சி.சிறிசற்குணராஜா(துணைவேந்தர் ,யாழ்ப்பாண பல்கலைக்கழகம் )மற்றும் திருமதி சி.சிறிசற்குணரஜா(சிரேஸ்ட விரவுரையாளர்) ,மொழியல் துறை யாழ்ப்பாணம் பல்கலை கழகம்) சிறப்பு விருந்தினர்களாக (பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்) திரு.இ.த.ஜெயசீலன் மற்றும் பிரதி கல்விப்பணிப்பாளர் ,(திட்டமிடல்) வலயக்கல்வி பணிமனை கிளிநொச்சி வடக்கு மற்றும் கெளரவ விருந்தினர்களாக திரு.நடேசபிள்ளை காந்தரூபன் மற்றும் அவரது துணைவியான ஶ்ரீமதி . சைலஜா காந்தரூபன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
பல்துறைகளில் பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை வாத்தியங்களுடன் மாலை அனுவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
இதனைத்தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்புரையிடன் தேசிய மற்றும் மாகாண மட்டங்களிலும் பலதுறைகளில் சாதித்த மாணவர்களுக்கு பரிசீல்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.








