சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. அதை நடிகர் கமல்ஹாசன் ஒரு நிகழ்ச்சியில் உறுதி செய்தார்.

இருவரும் சேர்ந்து பணியாற்றும் படம் எப்படி இருக்க போகிறது என பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் பேசியிருந்தது எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு கூட்டியது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக முதலில் தகவல் வெளியானது. அதற்குப் பிறகு நெல்சன் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என தகவல் பரவியது.

தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால் ரஜினிகாந்தும் கமலும் இணையும் படத்தை இயக்கப் போவது சுந்தர் சி தான்.

இந்த தகவலை தற்போது அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ரசிகர்களும் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

2027 பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் எனவும் தற்போதே அறிவித்து இருக்கிறார் கமல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here