சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் இருந்து மூன்று வேளை உணவு மற்றும் பானங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் குடும்ப உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளையடுத்து, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.








