கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட போகாவத்தை, திம்புள்ளை மற்றும் மவுண்ட்வனன் ஆகிய தோட்டங்களில் உள்ள லயன் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக குறித்த மூன்று தோட்டங்களிலும் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக தமது உறவினர்கள் வீடுகளிலும் தெரிந்தவர்களின் வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.








