வரலாற்று சிறப்பு மிக்க கிளிநொச்சி கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரப்பொங்கலுக்கான பாரம்பரிய விளக்கு வைத்தல் பாரம்பரிய முறைப்படி இன்று ஆரம்பமாகியுள்ளது.

2025ம் ஆண்டுக்கான கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய பங்குனி உத்தரபொங்கலுக்கான விளக்கு வைத்தல் நிகழ்வு பாரம்பரிய முறைப்படி இன்று இடம்பெற்றது.

எதிர்வரும் 11ம் திகதி பகல் இரவுப்பொங்கலாக நடைபெறவுள்ளது. பொங்கலுக்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று மாலை பண்டம் எடுப்பதற்காக பண்ட வண்டில் ஆலயத்திலிருந்து மீசாலை புத்தூர் சந்தி வரை சென்று பொங்கல் தினத்தன்று பண்ட வண்டில்கள் ஆலயத்திற்கு வரவுள்ளன.

இந்த நிகழ்வானது நூற்றாண்டுக்கு மேலாக இடம்பெற்று வருகின்ற பாரம்பரிய முறை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

(கிளிநொச்சி நிருபர்- ஆனந்தன்)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here