கண்டி,வத்துகாமம் நகரில் அண்மையில் மீன் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் நான்கு வாள்கள் மற்றும் மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மீன் வர்த்தகர் கடந்த 3 ஆம் திகதி தமது வீட்டுக்கு முன்பாக வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக மாத்தளை வலய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணையில், காலி கரந்தெனிய பகுதியில் வைத்து இருவரும், அம்பலாந்தோட்டை பகுதியில் வைத்து ஒரு சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








