Wednesday, April 29, 2026
No menu items!

சம்பவம்

மகுலுகஸ்வெவையில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் தாக்கிக் கொலை – 26 வயது கடற்படை சிப்பாய் கைது!

மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 26 வயதான கடற்படை சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 119 அவசர எண்மூலம் "ஒருவர் தாக்கப்பட்டு கடத்தப்பட்டார்" என்ற முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணையில், தேவஹுவையைச் சேர்ந்த 59 வயது நபர் தனது...

கொழும்பு புறக்கோட்டையில் பேருந்து மோதி ஒருவர் படுகாயம்!

கொழும்பு – புறக்கோட்டை பகுதியில் இன்று அதிகாலை 145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில் தனியார் பேருந்து ஒன்று பழைய மீன் சந்தை அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தைக் மோதியதில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையின் கருத்தின்படி, பேருந்து ஓட்டுநர் நித்திரை கலக்கத்தில் இருந்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர், பேருந்து நிறுத்தத்தில்...

பொறளை பகுதியை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, நால்வர் சிகிச்சையில்!

பொரளை, சஹஸ்புர, சிறிசர உயன பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த மற்றைய நான்கு பேரும் கொழும்பு...

வர்த்தகர் கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

கண்டி,வத்துகாமம் நகரில் அண்மையில் மீன் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாத்தளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துக்காக பயன்படுத்தப்பட்டதென சந்தேகிக்கப்படும் நான்கு வாள்கள் மற்றும் மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மீன் வர்த்தகர் கடந்த 3 ஆம் திகதி தமது வீட்டுக்கு முன்பாக வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர்...

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!

முந்தல் 12 ஏக்கர் பகுதியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்தனர். குறித்த பகுதியில், நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். இதில், 52 மற்றும் 55 வயதுடைய இருவரே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இவர்கள் இருவரும் தமது குடியிருப்புக்கு அருகில் வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்த நிலையில், அதற்கு வீட்டிலிருந்து கம்பி மூலம் மின்சாரத்தைப் பெற்றுள்ளனர். எனினும், அந்த...

தொடருந்தில் பயணித்த இளைஞன் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிழப்பு!

தொடருந்து மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று(19.11)கிரிபத்கொடை பகுதியில் நடைபெற்றுள்ளது. பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த அதிவேக தொடருந்தின் மிதிபலகையில் பயணித்த இளைஞரே உயிரிழந்துள்ளார். கனேமுல்ல பிரதேசத்தைச்சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு!

லெபனானில் வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாகவும், 450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் பேஜர் கருவிகள் வெடித்து உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்த...

துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் மீது தாக்குதல்!

கடையொன்றில் வைத்து துண்டுப் பிரசுரம் ஒன்றை பெற்றுக்கொள்ள மறுத்த நபர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச்  சம்பவம் நாவலப்பிட்டியில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் தாக்கப்பட்ட சம்பவம் அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. நாவலப்பிட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள...

துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கை; அமைச்சர் பந்துல குணவர்தன!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கும் புதிய கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட அமைதியின்மையை கருத்திற்கொண்டு புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “அரகலயாவின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்...

திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய விபத்து!

முல்லைத்தீவு ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று (11.07.2024) அதிகாலை  விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும்  ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img