வெளிநாட்டுப் பயணங்களுக்கான விசாக்களை வழங்குவதாக வாக்குறுதியளித்து, தனிநபர்களிடமிருந்து 35.8 மில்லியன் ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

21 தனித்தனி முறைப்பாடுகள் மீதான விசாரணையைத் தொடர்ந்து, பாணந்துறையைச் சேர்ந்த 41 வயதான சந்தேக நபர் புதன்கிழமை (06) காவலில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் 21 நபர்களிடமிருந்து மொத்தம் ரூ. 35,800,557.86 பெற்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here