முன்னாள் எஸ்.டி.ஐ.ஜி லலித் ஜெயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கஜனுக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கஜன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ள நிலையில் பகிரங்க பிடியாணை பிறபித்தும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்றம் 20ஆம் திகதி வியாழக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கூடுதலாக, லலித் ஜெயசிங்கவுக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அதை அவர் செலுத்தத் தவறினால், அவருக்கு மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் இப்போது மரண தண்டனை விதித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here