ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தியோகபூர்வ சீன விஜயம் தொடர்பான இருதரப்பு கூட்டறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் பொருளாதாரம், சமூகம் மற்றும் தொழில் துறைகளில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) பற்றிய விவரங்கள் இந்த அறிக்கையில் அடங்கும்.
ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று சீனாவில் உள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்றது.
வந்தடைந்தவுடன், ஜனாதிபதி திஸாநாயக்கவை ஜனாதிபதி Xi அன்புடன் வரவேற்றார், பூரண இராணுவ மரியாதையுடன் கூடிய முறையான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சுமூகமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, இருதரப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகின.
அபிவிருத்தியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இலங்கையுடன் ஒத்துழைக்க சீனா தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஷி தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவை அவர் வலியுறுத்தினார், எதிர்காலத்தில் இலங்கையுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
ஜனாதிபதி திஸாநாயக்கவின் நான்கு நாள் அரச விஜயம் நாளை நிறைவுபெறவுள்ளது.







