இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மொரீஷியஸ் உட்பட 11 நாடுகளின் ஊடகவியலாளர்களை திங்கட்கிழமை (2) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்தியாவின் உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் புதிய பரிணமிப்பு தொடர்பிலும், புலம்பெயர் இந்தியர்களின் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் இதன்போது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.









