தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணியளவில் ரோந்துப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோதே இலங்கைக்குக் கடத்த முயன்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான புகையிலைகளை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

ஒவ்வொன்றும் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் 1400 கிலோ புகையிலைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன் புகையிலைகளை ஏற்றி வந்த வாகனம் மற்றும் வாகனத்தில் இருந்த ஒருவரும்  கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here