Sunday, May 3, 2026
No menu items!

Monthly Archives: May, 2025

மின்துண்டிப்பு தொடர்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்..!

நேற்று வெள்ளிக்கிழமை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவானதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் வடக்கை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் – ஆளுநர் கோரிக்கை..!

எமது அதிகாரிகள் ஒரு சிலர் முதலீட்டாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இழுத்தடிக்கின்றார்கள் என்பது தெரியும். அதற்காக எமது மாகாணத்துக்கு முதலீடு செய்ய வரும் உங்கள் முயற்சிகளை தயவு செய்து கைவிட்டுவிடாதீர்கள் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளார். இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், 'யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம்...

காணாமல் போன தனது தாயை கண்டுபிடிக்க உதவுமாறு மகள் உருக்கமான கோரிக்கை..!

தனது தாயரை கடந்த மாதம் 10ம் திகதியிலிருந்து முல்லைத்தீவு செல்வபுரத்திலிருந்து காணவில்லை என்றும் தனது தாயாரை கண்டுபிடிக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் காணாமல் போனவரான சலோமியாம்பிள்ளை மேரி பிலோமினாவின் மகள் முடியழகன் வேணி கோரிக்கை விடுத்துள்ளார். அவர் நேற்று (30/05/2025) கற்கோவளத்திலுள்ள தனது இல்லத்தில் வைத்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தனது தாய்...

தேனீ கொட்டியதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் – அதிரடி நடவடிக்கையில் இறங்கினார் ரவிகரன் எம்.பி..! 

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (30.05.2025) தேனீக்கொட்டிற்கு இலக்காகி 78ற்கும் மேற்பட்ட மாணவர்களும், ஆசிரியர்கள் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார். அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக் கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை...

இன்றைய நாளுக்கான வானிலை..!

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு...

துசித ஹல்லோலுவக்கு விளக்கமறியல்!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனது பதவி காலத்தில் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்டேட்டில் அசத்தும் கூகுள் Search.. அது என்ன தெரியுமா?

அனைத்து தகவல்களையும் அள்ளித் தரும் கூகுள் நிறுவன தேடுபொறி அடுத்த நிலைக்கு அப்டேட் ஆகியுள்ளது. அது என்ன, அதன் சிறப்புகள் என்ன என்பதை பார்க்கலாம். சமையல் குறிப்பு தொடங்கி ராக்கெட் சயின்ஸ் வரை என்ன வேண்டுமானாலும் தேடலாம்.. அனைத்து தகவல்களையும் நொடியில் தேடித் தரும் தேடுபொறி தான் கூகுள். வேறு சில சர்ச் என்ஜின்கள் இருந்தாலும், முதலில்...

வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பெரியநீலாவணை காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று (30) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மரணமடைந்த பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாடொன்றில் பணிபுரிபவர்...

வவுனியாவில் கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்த மரம் – சிரமத்தில் மக்கள்..!

வவுனியாவில் கடும் காற்றினால் மரம் முறிந்து விழுந்ததில் வீட்டின் கதவு மற்றும் வேலிகள் சேதமடைந்ததுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகின்ற நிலையிலேயே இவ் சேதம் இடம்பெற்றுள்ளதுடன் இதனால் அப் பாதையூடான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் (29.05.2025) மதியம் வீதியோரமாக நின்ற...

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு வருகை!

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாததால் குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த 30 தொழிலாளர்கள் அடங்கிய இந்தக் குழு நேற்று அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நபர்கள் குவைத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியருக்கு கடுங்காவல் தண்டனை!

15 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தம்ம பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு, மொனராகலை உயர் நீதிமன்ற நீதிபதி டொக்டர் தமித் நலிந்த...
- Advertisement -spot_img