ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் (2025-2029) ,ன் பிரகாரம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிப்பொறுப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்காக புதிய மேல்நீதிமன்றங்கள் சிலவற்றை துரிதப்படுத்தி தாபிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தீர்மானம் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

அதற்கமைய, 04 மேல்நீதிமன்றங்களைத் தாபிப்பதற்காக தற்போது பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழுள்ள முகவரிகளில் அமைந்துள்ள கட்டிடங்களை நீதிமற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு ஒப்படைப்பதற்காக தமது அமைச்சின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அமைச்சரவையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதற்காக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

  • இலக்கம் டீ 88, கிறகெரி வீதி, கொழும்பு 07
  • இலக்கம் ஊ 76, பௌத்தாலோக்க மாவத்த, கொழும்பு 07
  • இலக்கம் டீ 108, விஜேராம வீதி, கொழும்பு 07
  • இலக்கம் டீ 12, ஸ்டென்மோர் சந்திரவங்கய, கொழும்பு 07

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here