7 கம்பனிகள் 1700 ரூபா சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளதாகவும் எதிர்வரும் திங்களன்று சம்பள நிர்ணயசபை கூடி தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேவையேற்பட்டால் தீர்மானத்தை அமுல்படுத்த சிறப்பு சட்டங்களையும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.







