காற்றின் வேகம் மணிக்கு 60 – 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கரையோரங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களை கவனமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடற்றொழில் நடவடிக்கைகளிலும், கடல் வழிப் போக்குவரத்திலும் ஈடுபட வேண்டாம் எனவும் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.








