போதைப்பொருள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்வதற்காக இலங்கையின் காவல்துறை, விசேட அதிரடிப்படை மற்றும் முப்படைகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 2024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளில் 7,100க்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பங்கேற்றனர்.

இதன்போது 25,671 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.

10,360 வாகனங்கள் மற்றும் 7,833 உந்துருளிகளையும் சோதனை செய்தனர்.

போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக மொத்தம் 1,504 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் சுமார் 809 கிராம் 160 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 705 கிராம் 214 மில்லிகிராம் ஹெரோயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்ட 22 நபர்களை அதிகாரிகள் தடுத்து வைத்தனர் மற்றும் நிலுவையில் உள்ள பிடியாணைகளுடன் 520 சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

ஜூலை 18 முதல் ஜூலை 24 வரை, காவல்துறை நடவடிக்கைகளில் 2.1 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், சுமார் 1.3 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 82 கிலோகிராம் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here