Saturday, April 18, 2026
No menu items!

போதைப்பொருள்

கற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான போதைப்பொருள் பறிமுதல்..!!

கற்பிட்டி கடற்பரப்பில் நேற்று (05) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, 03 உர மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்போது, 63 கிலோ 718 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மற்றும் 14 கிலோ 802 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகை...

போதை வலையமைப்பை முற்றிலும் அழிப்போம் – ஜனாதிபதி உறுதி!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ (A Nation United) என்ற தேசிய செயற்பாட்டின் தென் மாகாண நிகழ்ச்சி நேற்று (20) பிற்பகல் தங்காலை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டை போதைப்பொருள் அபாயத்திலிருந்து காப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை வலியுறுத்தினார். இந் நிகழ்வில், போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – சஜித் பிரேமதாச கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், "இங்கே அறிக்கைகள் வெளியிட வேண்டிய அவசியமில்லை. ஒரு ஊடக நிறுவனம் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டால், சட்ட...

கடலில் மிதந்த 100 கிலோகிராம் போதைப்பொருள் !

மேல் மாகாண காவல்துறை குற்றப்பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இன்று (18) காலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்குரிய சுமார் 100 கிலோகிராம் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பார்சல்களை மீட்டுள்ளனர். பேருவளையிலிருந்து 2.5 கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து கொண்டிருந்த போதே இதனை கைப்பற்றியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும், 20–25 கிலோகிராம் அளவுள்ள சந்தேகமான...

மன்னார் பேசாலை பகுதியில் போதைப்பொருள் கைதிக்கு ஆயுள் தண்டனை !

மன்னார் – பேசாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 36 வயதுடைய நபருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (நவம்பர் 12) ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், இந்த நபர் 2022 ஆம் ஆண்டில் 20 கிராம் 85 மில்லிகிராம் போதைப்பொருளுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மன்னார் மேல் நீதிமன்ற நீதவான் M.M.M....

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினர் ஈடுபடவில்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்!

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் ஈடுபடவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என...

1818 போதைப்பொருள் தகவல் தொலைபேசி இலக்கத்திற்கு 4 நாட்களில் 800 அழைப்புகள் – 5,300 பேர் கைது!

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய போதே...

வெளிநாட்டு போதை வலையமைப்பில் இருந்த ஏழு இலங்கையர்கள் சரணடைந்ததாக அமைச்சர் அறிவிப்பு!

மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்...

யாழில் இடம்பெறும் குற்ற செயல்களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி – ஆனந்த விஜேபால..!

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத சொத்து சேகரிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கின்றார். நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும் போதே அமைச்சர் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதேவேளை நாடளுமன்றத்தில் உரையாற்றிய ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் மாபியாக்கள், போதைப்பொருட்களை...

Ez Cash முறையை பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை – 50 வயது பெண் கைது..!!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண் ஒருவர், “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நுவரெலியா பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சிறப்புச் சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றுள்ளது. இச்...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img