இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததாவது, 2025 பெப்ரவரி 22 முதல் ஆகஸ்ட் 3 வரை, சட்டவிரோதமாக சேவை விட்டு வெளியேறிய முப்படை வீரர்கள் மீது விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 3,504 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது செய்யப்பட்டவர்களில், 2,937 பேர் இராணுவ வீரர்கள், 289 பேர் கடற்படை வீரர்கள் மற்றும் 278 பேர் விமானப்படை வீரர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை அமுல்படுத்தப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத வீரர்களை கைது செய்ய பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 2025 முதல் விசேட நடவடிக்கைகள் தொடர்ந்துவருகின்றன.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதன் பின்னர் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சு உறுதி செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here