பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 323 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) தெரிவித்துள்ளது.

அதேநேரம், அனர்த்தம் காரணமாக காணாமல் போயுள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாகாண நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை (17) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கைபர் பக்துன்க்வாவில் (KP) பெரிய அளவிலான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன.

படையினர், ஹெலிகொப்டர்கள் மற்றும் அவசரகால குழுக்கள் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை வெளியேற்றி, உணவுப் பொருட்களை விநியோகித்து, கூடாரங்களை அமைத்து, மருத்துவ முகாம்களை அமைத்து, சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கேபி மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (PDMA) கூற்றுப்படி, இறந்தவர்களில் 273 ஆண்கள், 29 பெண்கள் மற்றும் 21 குழந்தைகள் அடங்குவர்.

மேலும் 156 பேர் காயமடைந்தனர்.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி தொடங்கிய கனமழையால் 336 வீடுகள், 57 பாடசாலைகள், 23 பொது கட்டமைப்புகள் மற்றும் 320 கால்நடைகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன.

ஸ்வாட் பகுதியில் 219 வீடுகள் சேதமடைந்துள்ளன, அதே நேரத்தில் பஜௌர், ஷாங்க்லா, மன்சேரா மற்றும் பட்டாகிராமில் ஏராளமான வீடுகள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

புனேரில் 209 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகக் PDMA புள்ளிவிவரங்கள் கூறுகின்றது.

புனேரில் மட்டும் 850க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், பல இடங்களில் இடிபாடுகளில் இருந்து 181 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மொபைல் வலையமைப்புகள் மற்றும் மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகவும் அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் மீட்பு பணியாளர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here