2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை இன்று நாடு முழுவதும் 2,362 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது. 340,525 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து பரீட்சார்த்திகளும் தத்தமது பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் தங்கள் பரீட்சை நிலையங்களுக்கு முன்கூட்டியே வருகை தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.







