திருகோணமலையில் நேற்று உருவான பதற்றநிலை தற்போது தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பகுதியின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் பயன்படுத்தும் திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புதிதாக மதச் சின்னம் ஒன்று நிறுவப்பட்டதை அடுத்து பதற்றமான சூழல் உருவாகி இருந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை உடனடியாக தலையீடு செய்ததன் மூலம் நிலைமை இயல்பு நிலைக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக திருகோணமலை கடற்கரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.








