நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட குறித்த அறிக்கையில், மட்டக்களப்பு மாவட்டம், கோரளைப்பற்று தெற்கில் இந்த உயிரிழப்பு பதிவாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இரத்தினபுர, காலி, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 203 பேர் இந்த சீரற்ற காலநிலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இரத்தினபுர மாவட்டத்தில் உள்ள ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 17 பேர் தற்காலிக பாதுகாப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 39 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், ஒரு சிறு மற்றும் நடுத்தர நிறுவனமும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here