பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கடற்படை மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.
குறித்த எச்சரிக்கை ஜூன் 9 ஆம் திகதி காலை 10.30 மணி வரை விடுக்கப்பட்டுள்ளதுடன் அபாயகரமான கடல் கொந்தளிப்பு நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலான கடல் பகுதிகள், மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த சூறாவளிக் காற்றுடன், அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும்.
இதன் விளைவாக, மறு அறிவிப்பு வரும் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குச் செல்வதை தவிர்க்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படைத் தொழிலாளர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில்,முல்லைத்தீவு வழியாக திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை வரையிலும், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக கல்பிட்டியவிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன், அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக மன்னார் முதல் பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.







