ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனன் சார்பில் பசில் ராஜபக்ச  களமிறக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் பண்டார  கோரிக்கை விடுத்துள்ளார்.

பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான அனைத்து தகுதிகளும் அவருக்கு உள்ளன.

அவர் இந்நாட்டில் வேலை செய்து காட்டியவர், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பசிலைப் பற்றி கேளுங்கள்.

அவர் ஜனாதிபதிப் பதவிக்கு வருவதில் உள்ள தவறு என்ன?

அதேவேளை, நாமல் ராஜபக்ச  சிறந்த இளம் தலைவர். அவர் மொட்டுக் கட்சியை பலப்படுத்திவிடுவார் என்ற அச்சம் காரணமாகவே நாமலுக்கு எதிராகப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here