மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து, கடந்த  சில நாட்களுக்கு முன் காணாமல் போன 12 வயதுடைய சிறுவன், கதிர்காமத்தில் உள்ள விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பாட்டி மற்றும் தந்தையின் பராமரிப்பில் இருந்த சிறுவன், குடும்பத்தினர் மீதான அதிருப்தியில் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.

இதையடுத்து கொழும்புக்கு வந்த குறித்த சிறுவனை பிக்கு ஒருவர் சந்தித்தாகவும்,

சிறுவனின் விருப்பத்திற்கிணங்க கதிர்காமம் – மஹியங்கனை விகாரையின் விஹாராதிபதி தம்ம மைத்திரி தேரரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிக்குவாக மாறிய சிறுவனுக்கு மதுரன் குளிரில் சுபோதின் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக விகாரையை சேர்ந்த அனுருத்த மைத்திரி தேரர் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here