இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியின் பெல்மதுளை இல்லத்தில் சற்றுமுன் கட்சி மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என பெருமளவானோர் கூடியுள்ளனர்.

அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் கட்சியுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக அறியப்படுகிறது.

இதேவேளை இரத்தினபுரி மாவட்ட மொட்டுக்கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் செல்ல தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here