வத்தளை, மஹாபாகே பகுதியில் நபர் ஒருவரிடமிருந்து 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மஹபாகே பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றுபவர் என தெரியவந்துள்ளது.
உஸ்வெட்டிகெய்யாவ பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் அசௌகரியம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும், போதைப்பொருள் தொடர்பான பெயர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்காமல் இருப்பதற்கும், அவரை சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காகவும் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.








