வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா உற்சவமானது இன்றையதினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முருகப் பெருமானுக்கு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன. அதன்பின்னர் முருகப்பெருமான் தேரேறி வெளிவீதியூடாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த இரதேற்சவத் திருவிழாவை காண்பதற்கு நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர். அத்துடன் இன்று காலை ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க அவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்து தரிசனம் செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here