சோஷலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் உலக சோஷலிச வலைத்தளத்தின் கொழும்பு ஆசிரியர் குழுவின் உறுப்பினருமான பாணி விஜேசிறிவர்தன தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சோஷலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று (08) கொழும்பு 07 சுதந்திர சதுக்க ஒழுங்கையில் அமைந்துள்ள தேசிய நூலகம் மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது .
பாணி விஜேசிறிவர்தன சார்பில் நேற்று (07.08) கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








