முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சமகி ஜன சந்தனயவில் இணைந்து கொண்டதாக வெளியான தகவலை சமகி ஜன பலவேகய கட்சி மறுத்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட SJB, கட்சி தொடர்பான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் தற்போது பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

“முன்னாள் ஜனாதிபதியுடன் கைகோர்க்கவோ அல்லது அவருடன் கூட்டணி அமைக்கவோ சமகி ஜன சந்தனயவுக்கு எந்த காரணமும் இல்லை” என அக்கட்சி தெரிவித்துள்ளது.

சமகி ஜன சந்தானய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்துடன் தொடர்புடைய குழுவொன்று இவ்வாறான தவறான தகவல்களை பரப்புவதாக SJB குற்றம் சுமத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here