ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், எமிகானூரில் பசுமாடு ஒன்று வயிறு பெருத்தபடி அவதி அடைந்து சாலையோரம் இருந்ததைக் கண்ட நபர் கால்நடை வைத்தியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கால்நடை வைத்தியர்கள் மாட்டை மீட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அதன் வயிற்றில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதைனையடுத்து வைத்தியர்களின் அறுவை சிகிச்சை மூலம் மாட்டின் வயிற்றில் இருந்து 70 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுத்துள்ளனர்.







