அண்மைய ஆண்டுகளில் இலங்கையில் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார செயலாளர் டொக்டர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவாச ஆரோக்கியம் தொடர்பான தேசிய சுகாதார மற்றும் பராமரிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (NIHR) குளோபல் ஹெல்த் ரிசர்ச் யூனிட்டின் ‘RESPIRE’ வருடாந்திர அறிவியல் கூட்டத்தில் (ASM) பேசிய டாக்டர். மஹிபாலா, விரைவான நகரமயமாக்கல், காற்று மாசுபாடு போன்ற காரணிகளால் இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்று கூறியுள்ளார்.
மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு இல்லாமை, குறைந்த கல்வி நிலைகள் மற்றும் வறுமை ஆகியவை சுவாச நோய்களின் பரவலுக்கு பங்களிப்பதாகவும் டாக்டர் மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சுகாதார பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக விழிப்புணர்வு மற்றும் கல்வியின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பில், உலகம் முழுவதிலும் உள்ள சுவாச சுகாதார நிபுணர்கள் கொழும்புக்கு வந்துள்ளனர்.
ஆசிய பிராந்தியத்தில் சுவாச நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்களைத் தொடங்குவதே இலக்காகும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.








