ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் தங்களின் விஞ்ஞாபனங்களை தபால் மூலம் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சேவை இலவசமாக வழங்கப்படுவதாக NEC தலைவர் ஆர்.எல்.ஏ.எம் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் தங்களின் விஞ்ஞாபனங்கள் மற்றும் பிற தேவையான ஆவணங்களை எந்த கட்டணமும் இன்றி தபால் சேவை மூலம் பொதுமக்களுக்கு அனுப்ப முடியும் என்றும் அவர் கூறினார்.








