ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐக்கிய ஜன பலவேகய கட்சி கூட்டணி அமைக்கும் வதந்திகளை முறியடித்துள்ளது.

SJB ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாக SJB பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த பொய்யான தகவல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

எம்.பி.மார்க்கர் மேலும் தெரிவிக்கையில், SJB தனிநபர்களுக்கு இடையிலான கூட்டணிக்கு ஒருபோதும் உடன்படாது.

பல அரசியல் கட்சிகள் அதன் கொள்கை அறிக்கையுடன் பொதுவான ஒருமித்த அடிப்படையில் SJB உடன் இணைந்துள்ளன, அத்தகைய கொள்கை அடிப்படையிலான கூட்டணிகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பரப்பப்படும் போலியான தகவல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் மார்க்கர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here