நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 240 முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், அவற்றுடன் தொடர்புடைய 67 சந்தேக நபர்கள் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ் அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.








