ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று, தனது வாக்கினை செலுத்தினார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அனுஷா சந்திரசேகரன், பெருந்தோட்ட மக்கள் உண்மையிலேயே மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர், இந்த தேர்தலில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.







