விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை மேற்கொள்வதற்காகச் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இன்று இலங்கை வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் தலைமையில் இந்த குழு இலங்கை வரவுள்ளது.

இந்த குழு எதிர்வரும் 23 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து மதிப்பாய்வு தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடும் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here