மோதல் காரணமாக இன்னல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

குறித்த 27 பேரும் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டை வந்தடைந்தவர்களில் 5 சிறார்கள், 3 பெண்கள் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, மோதல் காரணமாக லெபனானில் நிர்க்கதியாகியிருந்தவர்களில் இதுவரை 53 பேர் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here