உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் நாஉல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வராகொல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாஉல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 54 வயதுடைய கோன்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








