பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும் என்று கொழும்பு குற்றப்பிரிவு இன்று (20/02/2025) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
கொலை சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்து இந்த அறிவிப்பை வெளியிட்டது.
மேலும், கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் அவர் பயணித்த வேனின் சாரதியும் தற்போது பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








