எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஊடகப் பேச்சாளராக கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் நேற்று (27) நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

பிரசாத் சிறிவர்தன கடந்த பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்திலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை வேயங்கொடை பண்டாரநாயக்க மத்திய கல்லூரியில் முடித்தார், பின்னர் களனி பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்று உயர் கல்வியைப் பெற்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here