வேலணை பிரதேச சபைக்காக சுயேச்சை குழு-2 இல் போட்டியிடும் “தீவக முன்னேற்றக் கழகத்தின்” தலைமைக் காரியாலயம் நேற்று (10/04/2025) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முற்பகல் சாட்டி வீதி, மண்கும்பானில் குறித்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.

இதன்போது வேட்பாளர் அறிமுகம் இடம்பெற்று தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வேலணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சுயேச்சை குழு வேட்பாளருமான சுவாமிநாதன் பிரகலாதன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வேட்ளர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[யாழ் நிருபர் – விஜய்குமார் லோஜன்]








