இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக 09 மாவட்டங்களில் 485 குடும்பங்களைச் சேர்ந்த 1757 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவல்களின்படி, இன்று காலை 09.00 மணி நிலவரப்படி, புத்தளம் மாவட்டத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
பல்வேறு அனர்த்த சம்பவங்களில் 08 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.







