Sunday, July 5, 2026
No menu items!

K Dilakshan

நாங்கள் எவ்வித  சலுகைகளுக்கும் பேரம் போகவில்லை; சோமநாதன் பிரசாத்…

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் தொடர்ந்து  மக்களுக்கான உரிமை தொடர்பாக குரல் கொடுத்து வரும் இயக்கமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இயல் பட்டு வருவதாக குறித்த கட்சியின் மன்னார் மாவட்ட வேட்பாளர் சோமநாதன் பிரசாத் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த...

இலங்கைக்கான சுவிஸ் தூதரக செயலாளர் மற்றும் செல்வம் அடைக்கல நாதனுக்கும் இடையில் விசேட சந்திப்பு…

சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான முதல் செயலாளர் ஜஸ்டின் கொய்லட்  ( justine boillat)  தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (22.10) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான சுவிஸ் தூதரக அரசியல் விவகாரங்களுக்கான...

வீதி சமிக்ஞைகளை மோதி தள்ளிய கப் ரக வாகனம்…

பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தர்மங்கேனி பகுதியில் இன்று 22.10.2024 வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக கப் ரக வாகனம் வீதியில் பொருத்தப்பட்டிருந்த வீதி சமிக்ஞைகளை மோதி தள்ளி பலத்த சேதத்துக்கு உள்ளானது. வாகன சாரதி மயிரிழையில் உயிர்தப்பினார். இச்சம்பவம் பனை தர்மங்களில் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. இவ்விபத்து தொடர்பாக...

மன்னாரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் போராளியான பெண் வேட்பாளர்…

வன்னி தேர்தல் தொகுதியில்  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போராளி யசோதினி திங்கட்கிழமை (21.10) மன்னாரில் பல பாகங்களிலும் தனது தேர்தல் பரப்புரையை முன்னெடுத்தார். அவருக்கு ஆதரவாக முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர். மன்னார் நகர பஜார் பகுதியில் ஆதரவாளர்களுடன்  சந்திப்பிலும் ஈடுபட்டார். மேலும்  மன்னார் சாந்திபுரம்  பேசாலை,...

கொலை, ஊழல், இலஞ்ச மோசடியில் ஈடுபட்ட அமைச்சர்கள் கைது செய்யப்படுவார்கள்; விமலசேன லவக்குமார்…

மட்டக்களப்பில் கடந்த காலத்தில் அமைச்சர்களாக இருந்து இலஞ்சம், கொலைகள், ஊழல் மோசடி உட்பட பவிதமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளவர்கள் எப்போது எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்ற சூழல் உள்ளது எனவே மக்கள் வாக்களிக்கும் போது சிந்திக்க வேண்டும் என சுயேச்சைக்குழு 2 இலக்கத்தில் முந்திரிகைப்பழம் சின்னத்தில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் வடகிழக்கு முன்னேற்ற கழக...

தமிழர கட்சியில் இருந்து வெளியேறியவர்களால் வீடு சுத்தமாக வரும்; தியாகராசா சரவணபவன்…

தமிழரசு கட்சியின் எந்த நிகழ்விலும் பா. அரியேந்திரன் பங்கு கொள்ள கூடாது என கட்சி தீர்மானம் இருக்கின்றபோது அவர் சிறினேசனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது தீர்மானத்தை மீறிய செயல் அதேவேளை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து சென்றவர்கள் பதவிகளுக்கு இருப்பவர்களுக்கு எமது  கட்சியில் இடம் இல்லை வெளியேறியவர்கள் வெளியேறட்டும் வீடு மிக சுத்தமாக வரும் என...

தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்; சிவசக்தி ஆனந்தன்…

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்பதை கூறி கொண்டுள்ள  நேரத்தில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை என்பதை அரசாங்கத்தின் அதே நிலைப்பாட்டுடன் ஆதரவாக   செயல்பட்டு  வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

மன்னார் பிரதான பாலத்தடியில் கடற்கரை பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு…

மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் நீண்டகாலமாக இராணுவ சோதனை சாவடி அமைத்து காணப் பட்ட பகுதியில் கடற்கரை பூங்கா அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை (21.10) மன்னார் பிரதான பாலத்துக்கு அருகில் மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் இடம்பெற்றது. நீண்ட நாட்களாக பிரதான பாலத்துக்கு அருகில் இராணுவ சோதனை சாவடி மற்றும்...

கிளிநொச்சி விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம்…!

கிளிநொச்சி ஏ9 வீதி மத்திய ஆரம்ப வித்தியாலயம் முன்பாக இன்று அதிகாலை 7.30 மணியளவில்  (21.10.2024) இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து முருகாண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் வீதியைக் கடக்க முன்ற துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு நபர்களும் விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஏ9 வீதியில் பாடசாலையை குறிக்கும்...

இந்திய இராணுவத்தால் யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரது நினைவேந்தல்…!

இந்திய இராணுவத்தினரால், யாழ். போதனா வைத்தியசாலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது  37வது ஆவது நினைவு தினம் இன்று (21.10)  நினைவு கூறப்பட்டது. 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களின்...

About Me

4086 POSTS
0 COMMENTS
- Advertisement -spot_img

Latest News

பஸ் கட்டண திருத்தத்தில் சிக்கல்;தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

தேசிய போக்குவரத்து  ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கமைய, திருத்தப்பட்ட பஸ் கட்டண தொகை நாளை (6) முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வருகிறது. இந்த புதிய கட்டணங்கள் தனியார் மற்றும்...
- Advertisement -spot_img