Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

பேரிடரால் 95 வீதிகளுக்கு தடை..!!

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வீதிகளில் இன்னும் 95 வீதிகள் தடைபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது. இந்த வீதிகளை சரி செய்யும் பணிகள் அடுத்த சில நாட்களுக்குள் நிறைவடையும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார். பேரிடர் நிலைமை காரணமாக மொத்தம் 256 வீதிகள் பாதிக்கப்பட்டிருந்தன....

ஜனாதிபதி தலைமயில் அவசர அமைச்சரவைக் கூட்டம்..!!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (05) மாலை 5.00 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பைச் செய்திப் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார விடுத்துள்ளார்.

தொலைபேசி–இணைய சேவைகள் சீரமைப்பு தொடர்பில் வெளியான தகவல்..!!

சமீபத்திய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் வியாழக்கிழமைக்குள் முழுமையாகச் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். சேவைகளை மீட்டெடுப்பதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களும் அயராது உழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மண்சரிவு மற்றும்...

அனர்த்தத்தினால் பலி யானோர் எண்ணிக்கை 465 ஆக அதிகரிப்பு; 31,000 வீடுகளுக்கு சேதம்..!!

​இலங்கையின் டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. பாதிப்புகள் குறித்த சமீபத்திய அறிக்கை: ​பாதிப்புக்குள்ளானோர்: 437,507 குடும்பங்களைச் சேர்ந்த 1,558,919 பேர் ​மோசமாகப் பாதிக்கப்பட்ட...

அனர்த்த உதவியாக இரண்டு கள மருத்துவமனைகள்-70க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவப் படையினர் இலங்கையில்..!!

'டிட்வா' சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில், 70 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப்படையின் பாரிய C-17 ரக விமானம்  நேற்று (மாலை) கொழும்பில் தரையிறங்கியது. இந்தியா வழங்கியுள்ள விரைவாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கள மருத்துவமனைகளின் (Field Hospitals) முதல்...

மீண்டும் திறக்கப்பட்டுள்ள கடுவெல – பத்தரமுல்ல வீதி..!!

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகப் பெய்த பலத்த மழை காரணமாக கடுவெல நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்த அத்துருகிரிய  நுழைவாயிலும் நேற்று (02) திறக்கப்பட்டது. அதன்படி,...

Frozen Vegetables ஐ  இறக்குமதி செய்ய அனுமதி..!!

நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாத் துறை மற்றும் விருந்தகங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முக்கியமான முடிவொன்று எடுக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் தரங்களுக்கு இணங்க, எதிர்வரும் 2 மாதங்களுக்குத் தேவையான உறைந்த காய்கறிகளை (Frozen Vegetables) தட்டுப்பாடு இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அண்மையில்...

இன்றைய நாளுக்கான வானிலை – பொதுமக்கள் அவதானம்..!!

வடக்கு , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பதுளை மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்  என சிரேஸ்ட  வானிலை அதிகாரி  மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில...

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதிகள் அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழநிலை காரணமாக அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதிகளை  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாதுபோன க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்...

பேரிடர் தொடர்பில் பொய்யான தகவல் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!

பேரிடர் காலப்பகுதிகளில் பொய்யான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். கொத்மலை நீர்த்தேக்கத்தின் அணையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில் இந்த தகவலை பரப்பியர்களை உடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...