நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழநிலை காரணமாக அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதிகளை  கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக நடத்த முடியாதுபோன க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்தப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவாவா தெரிவித்தார்.

மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலைமையை மதிப்பாய்வு செய்த பின்னர், போக்குவரத்து இடையூறுகள், தகவல் தொடர்பு சிக்கல்கள் மற்றும் மின்சாரத் தடைகளால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மற்றய பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட மாகாண மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும்.

பேரிடரால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, ஏதேனும் உயர்கல்வி நிறுவனம் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டால், மீண்டும் திறக்கும் தேதியை முடிவு செய்யும் அதிகாரம் அந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here