Thursday, July 9, 2026
No menu items!

உள்நாட்டுச்செய்திகள்

நெல் விவசாயிகளுக்கு உர மானியத்தின் நிலையான விலையை நிலைப்படுத்த வேண்டும்; கே.டி. லால்காந்த!

விவசாய, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, உலக சந்தை நிலவரத்தை கருத்தில் கொண்டு நெல் விவசாயிகளுக்கான உர மானிய விலையை நிலைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் விவசாயிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர், நெல் பயிர்செய்கை தொடர்பில் திட்டவட்டமான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து விவசாயிகளையும் பாதுகாத்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே அரசாங்கத்தின்...

விசர் நாய்க்கடி தடுப்பு மருந்து 3 மில்லியன் மாத்திரைகள் கொள்முதல் ஒப்பந்தம் அமைச்சரவை அங்கீகரிப்பு!

நீர்வெறுப்பு நோய் தடுப்பதற்காக மனிதப் பயன்பாட்டுக்கான விசர் நாய்க்கடி ஊசிமருந்து (0.5ml/1ml) செயலிழக்கச் செய்யப்பட்ட 3,000,000 மாத்திரைகளைப் பெறுவதற்கான சர்வதேச போட்டி விலைமுறைகள் கோரப்பட்டுள்ளன. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதனை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. ஆறு நிறுவனங்கள் விலைமுறைகள் சமர்ப்பித்துள்ளன, இதில் குறைந்த விலையாளர் Citihealth Imports (Pvt) Ltd (Manufacturer: Serum Institute of India...

விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் இணையும் இலங்கை!

‘விரிவான பொருளாதாரத்திற்கான பிராந்திய பங்காண்மை’ (RCEP) ஒப்பந்தத்தில் இலங்கையும் இணைந்து பங்கேற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. RCEP, தென்கிழக்காசிய நாடுகள் (ASEAN) மற்றும் அவுஸ்திரேலியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் கூடி அமுல்படுத்தப்படும் விரிவான வர்த்தக ஒப்பந்தமாகும். இந்நோக்கில், இலங்கை 2023 ஜூன் 28 ஆம் திகதியன்று விருப்பக்கோரல்...

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கனமழை; பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

இலங்கைக்கு தென்கிழக்கு திசையிலும் தென்மேற்கு திசையிலும் நிலவிய காற்றுச் சுழற்சிகள் ஒருங்கிணைந்து ஒரு காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற்றம் பெற்று இன்றைய தினம் (26.11.2025) இலங்கையின் தென்பகுதியூடாக ( அம்பாந்தோட்டைக்கு அண்மையாக) வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்கும். இந்த தாழமுக்கம் எதிர்வரும் 27.11.2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று அன்றைய...

அச்சுறுத்தலால் எங்களை அடக்க முடியாது – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் (SLPP) அரசியல் பயணத்தை எந்தவித அச்சுறுத்தலாலும் தடுக்க முடியாது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், SLPP கட்சியின் உறுப்பினருமான இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி அரசு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் SLPP...

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம்!

இந்திய இராணுவத் தளபதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  இதன்படி, ஜெனரல் உபேந்திர திவேதி, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல், இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வருகைதர உள்ளார். இந்த பயணத்தின் போது அவர், பல முக்கிய சந்திப்புகளில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகளை திருடிய காதலி!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞரும், கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த யுவதியும் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் திருமண தினமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால், கடந்த சில நாட்களாக...

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதம் மாற்றமின்றி தொடரும்!

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, நாட்டின் கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 7.75% ஆக மாற்றமின்றி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய (25) நாணயக் கொள்கை சபைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

பாடசாலை நேர நீடிப்பு: மாணவர்–ஆசிரியர் போக்குவரத்துக்கு அரசு ஏற்பாடுகள் – பிரதமர்!

பாடசாலை நேரம் நீடிக்கப்படும் நிலையில், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாடசாலை நேர நீட்டிப்பின் காரணத்தையும் விளக்கினார். புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் ஒத்திசைக்கவும், பயிற்சிப் நேரத்தை மேம்படுத்தவும் பாடசாலை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். இந்த மாற்றத்தால், மாணவர்கள்...

இன்றைய நாளுக்கான வானிலை !

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக இலங்கையின் தென் திசையில் தாழ் அமுக்கப் பிரதேசம் நிலைகொண்டிருந்தது. இது அடுத்துவரும் 30 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து தாழ் அமுக்கமாக விருத்தியடையும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இதன் தாக்கத்தின் காரணமாக அடுத்துவரும் சில தினங்களுக்கு நாடு முழுவதிலும் காற்றும் மழையுடனான வானிலையும் அதிகரித்துக்...
- Advertisement -

Latest News

போகம்பர சிறை வளாகம் சிறைச்சாலையாக அறிவிப்பு

பழைய போகம்பர சிறை வளாகம் மீண்டும் சிறைச்சாலையாக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த...